<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Sunday, August 11, 2013

தினமணி கட்டுரை

முகப்பு > கட்டுரைகள்

தமிழை வாசிக்க வைப்போம்

First Published : 11 July 2013 04:32 AM IST
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது தேசியக் கவியின் ஆசை. ஆனால், தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் தமிழாக இருக்கிறதா என்பதே ஆய்வுக்குரியது.
  இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.
   இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாகவும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழியாகவும் இருக்கிறது தமிழ்.
   2,500 ஆண்டு பழமை வாய்ந்த "செம்மொழியாக' தமிழ் இருக்கிறது என்பது தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடியதாக இருந்தபோதும், உணர்வுப்பூர்வமாக தமிழ் நம்மோடு இருக்கிறதா?
   மொழி தெரியாத ஏதோ ஒரு இடத்தில் நாம் தனித்து விடப்படும்போது, உதவிசெய்ய வருபவர் தமிழில் பேசினால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்ற உணர்வே அது. அதாவது தமிழ் மொழி நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பிறக்கிறது அல்லவா? அது மொழியின்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த உறவைக் காட்டுகிறது. அது நமது முதல் உறவு, நமது அடையாளம்; பிறகுதான் தாய், தந்தை எல்லாம்.
  தமிழ் மொழியிலிருந்து தனிமைப்படும்போது பெறுகின்ற அந்த உணர்வை, நாம் தமிழோடு இருக்கும்போது மறந்து விடுகிறோம். நமது அடையாளத்தையே நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். முதலில் நாம் பார்க்கும் இடமெல்லாம் தமிழ் இருக்கிறதா என்று ஒருமுறை சுற்று முற்றும் பார்த்தாலே போதும். வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளின் பெயர்ப் பலகைகள் நம் கண்ணெதிரே தெரிகின்றவை. அவற்றில் நூற்றுக்கு 75 சதவீதம் தமிழ் பிரதானமாக இல்லை.
 தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் வலம் வந்தால் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழை விட ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தைப் பிரதானமாக எழுதி வைத்திருக்கின்றனர், அல்லது ஆங்கில மொழியை அப்படியே தமிழ் வார்த்தையாக எழுதிவிடுகின்றனர்.
   ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டதால் ஏற்பட்ட பாதிப்பா, அல்லது ஆங்கிலமே உலக அளவிலான தொடர்பு மொழி என்ற மாயையால் இதைக் கையாள்கின்றனரா என்று தெரியவில்லை. இந்த நிலை நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றில் இல்லை.
    கேரளத்தில் வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் பெரும்பாலும் மலையாளமே  பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. ஆங்கிலம் இரண்டாவதாக சிறிய அளவில் இருக்கிறது. அண்மையில் திருவனந்தபுரம் சென்றபோது, அவ்வப்போது இது எந்த ஊர் என, தமிழ் மட்டுமே தெரிந்த எங்களுடைய கார் டிரைவர் கேட்டுக்கொண்டே வந்தார். அத்தனை பெயர்ப் பலகைகளிலும் மலையாள மொழியே பெரிதாகக் காணப்பட்டது. ஆங்கிலம் சிறிய எழுத்தில் இருந்ததால் அடையாளம்காண முடியவில்லை. 
 ஆங்கிலத்தில் பேசுவதையே இன்றைக்கும் தமிழர்கள் நாகரிகமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும், அழைப்பிதழை ஆங்கிலத்தில் அச்சிடுகின்றனர்.
 பள்ளி, கல்லூரி அழைப்பிதழ்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் அச்சிடப்படுகின்றன.
   தமிழக அரசு அலுவலகங்களில் இன்னமும் ஆங்கிலம் கோலோச்சுகிறது. நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தில்தான் வாதங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
 இந்த நிலையில் தமிழுணர்வு மங்கிப்போகாமல் இருக்க வேண்டுமென்றால் பார்க்கும் இடங்களிலெல்லாம் தமிழை வாசிக்க வைப்பதுதான் நமது மொழியின் வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்.

Friday, August 9, 2013

தமிழ்கடல் நெல்லை கண்ணன் பக்கம்

Saturday, August 10, 2013


வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை


நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வில்லை .யார் ஆண்டாலும் இதுதான் நிலை. பா.ஜ.க். காங்கிரஸ் எதுவெனிலும் இதுதான் நிலை.

ஆனால் உச்சநீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் மீது  கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றவுடன். பா.ஜ.க. காங்கிரஸ் என்று எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. கேவலம் கம்யூனிஸ்ட்களும்.உச்ச நீதிமன்றத்தின் கையை ஒடிக்க வேண்டும். என்று முடிவெடுத்து விட்டனர் நாட்டின் மிக முக்கிய தலைவர்கள்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றார் லோகமான்ய பால கங்காதர திலகர் பெருமான்.

பசியில் ஏழை திருடினால் சிறை. வாழ்வதற்காக பணிக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் கட்டாயப் படுத்தப் பட்டு பாலியல் தொழிலில் தள்ளப் பட்டால்
அவளுக்குச் சிறை

ஊழல் எங்கள் பிறப்புரிமை அதில் உச்ச நீதி மன்றம் தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்பதற்கான் புதிய சட்டத்தை உடனே கொண்டு வருவோம் என்கின்றனர் வெட்கமற்ற தலைவர்கள்.இவர்கள் மனமறிந்து விபச்சாரம் செய்கின்றவர்கள்.ஆனால் இவர்களுக்கு முழு நேர காவற்றுறைக் காவல்.

இவர்களில் பிரதமர் வேட்பாளர்கள் வேறு அறிவிக்கப் படுகின்றார்கள்.

வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை  என்ற பாவேந்தரின் பாடல் வரிகள் தான் நினைவைக் குடைகின்றன.

மேட்டூர் அணை நிரம்புகின்றது. சில நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருந்தேன். கன்னட வெறியர்கள் மலையாளத்துத் துரோகிகள் என்றெல்லாம் வசை பாடாதீர்கள் என்று .இயர்கையை அழிக்கின்ற ஈன புத்தியை அரசியல் தலைவர்களின் கைக்கூலிகள் விட்டொழித்தால்  இயற்கையின் கருணை சிறந்தே விளங்கும்.

Friday, July 19, 2013


என்றும் பயணம் செய்வான்

அரங்கன் அவன் அருளாலே திருவரங்கத்து
அரங்கன் அவன் ந்ண்பனால் வாலியானான்
கிறங்குகின்ற போதவனை செட்டி நாட்டு
கிருஷ்ண் பக்தன் கண்ணதாசன் பாடல் ஓன்று
மயங்குவதும் தயங்குவதும்  வேண்டாம் என்ற
மறை மொழியால் மனம் உறுதி கொள்ளச் செய்ய
மய்ங்குகின்ற பாடல்களால் தமிழாம் தாயை
மாண்பமையச் செய்த வாலி  இல்லை என்றார்


புரிகின்றது நண்பர்களே உடலை விட்டால்
போய் விட்டார் என்பதுவே நம் வழக்கம்
அறிவுடையோர் மட்டுமே உணர்வார் நன்கு
அரங்கன் வாலி அரங்கனிடம் சரணடைந்தான்
தெளிவோடு வாழ்ந்த அந்தத் தெய்வமகன்
தீர்க்கமாய் தமிழோடு வாழ்வான் என்றும்
பணிவோடு சொல்லுகின்றேன் கவிஞர் வாலி
பைந்தமிழரோடு என்றும் பயணம் செய்வான்

Saturday, July 13, 2013


உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி

உச்ச்நீதி மன்றம் மறுநாளே இன்னொரு தீர்ப்பையும் தந்துள்ளது. சிறையில் இருந்தாலே அவர்கள் தேர்தலிலே போட்டியிடக் கூடாது என்று. நமது அரசியல் வாதிகள் பதிலைக் காணோமே என்று பார்த்தேன்.

முதன் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது தான் ஆச்சரியமளிக்கின்றது.சட்ட அமைச்சர் கபில் சிபல் எல்லா அரசியல் கட்சிகளையும் கலந்துதான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்.
நமது அசோக ஸ்தூபியில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றம் நீதித் துறை செய்தி ஊடகங்கள் நாட்டு மக்கள் என்று.

பாண்டிச்சேரிய்ல் ஒரு  15 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்னேன் ஒரு இலக்கிய நிகழ்வில் இந்தச் சிங்கங்களை அச்சடிக்கின்ற பொழுது ஒரு சிங்கம் மறைந்து போகும் அதுதான் இந்திய மக்களைக் குறிக்கின்ற் சிங்கம்  என்று.

கிரிமினல்கள் உதவியில்தான் இந்நாட்டு அரசியல் நடக்கின்றது என்பதனை நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பெருமையோடு ஒத்துக் கொள்வதனைப் பார்க்கின்ற போது உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கின்றது. இத்தனை வெளிப்படையாக எங்கள் மானம் சூடு சுரணையற்ற தலைவர்களை எங்கள் முன் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வைத்ததற்காக.

Thursday, July 11, 2013


யார் காக்க

உச்ச நீதிமன்றம் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப் பட்டவுடன் நாடாளுமன்ற உற்ப்பினரோ சட்டப் பேரவை உறுப்பினரோ உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும் என்று இன்று ஒரு தீர்ப்பினை அளித்துள்ளது. கிரிமினல் குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலிலே போட்டியிடவே தடை விதித்தாலொழிய இந்த நாடு தேறாது.

ஒரு நீதிபதி ஒரு காவற்றுறையைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றியிருக்கின்றார். அவர் ஒரே நாளில் மீண்டும் பதிவியில் நீதிபதியாக அமர்த்தப் படுகின்றார். காவற்றுறைப் பெண்ணிற்கே இது தான் நிலை என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன.

Tuesday, July 9, 2013


விஜய் தொலைக்காட்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

அன்புமிக்க தமிழர்களுக்கு வாழ்க தமிழுடன். விஜய் தொலைக்காட்சி மீண்டும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்வை தொடங்கியுள்ளது. இந்த முறை தமிழுணர்வு மிக்க நல்லறிவோடு கூடிய நல்ல இளம்படை என்னோடு பணியாற்றுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 11 ம்ணி வரை நிகழ்ச்சி ஒலி பரப்பாகின்றது. அனைவரும் பார்க்க வேண்டுகின்றேன். அன்புடன் நெல்லைக்கண்ணன்


சிந்தனைக்கு

ஊழல் செய்த அமைச்சருக்கு மரணதண்டனை.பதறி விடாதீர்கள். சீனாவில்.



கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார். இனிமேல் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.பல நாட்கள் டி.ஆர்.பாலு சோனியாகாந்தியைச் சந்தித்து ஆதரவு கேட்டு மான உணர்வே இல்லாமல் காங்கிரஸ் ஆதரவு தந்து  காக்கை பாடினியார் கனிமொழி வெற்றி பெற்ற மறு நாள் தமிழர்களுக்காகவே (அழகிரி ஸ்டாலின் கனிமொழி ) வாழும் மாமனிதர் கருணாநிதி சொல்லுகின்றார். காங்கிர்ஸோடு எங்களுக்கு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. உடனே காங்கிரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக்கும்  எங்களுக்கும் திமுகவிற்கும் உறவு இல்லை என்கின்றார். யாருக்கு மானமும் வெட்கமுமில்லை எனப்தனைக் கூட நாம் கண்டு பிடித்து விடாமல்  ந்ம்மைக் குழப்புகின்ற காங்கிரஸையும் திமுகவையும் பார்த்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.

Monday, June 24, 2013


கண்ணதாசக் கோமகனை

படைத்தவனும் தமிழருக்காய் படைத்தளித்தான்
பாடல் பேச்சு எழுத் தறிந்த பாவலனை
கிடைத்த எந்தப் பொருளையுமே பாடலாக்கும்
கேள்விகளின் நாயகனை செட்டி நாட்டைக்
கொடித்தலமாய் ஆக்கி புகழ் சேர்த்தவனை
கொற்றவனை கண்ணதாசக் கோமகனை
பனித் தமிழாள் நமக்களித்த் இந்த நாளைப்
பைந்தமிழர் எல்லோரும் போற்றி நிற்போம்

Sunday, May 26, 2013