<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Wednesday, July 22, 2020

கொல்வோம் கொரானாவை


கொரானா எனும் கொள்ளை
நோய்  மனிதனை கொலை செய்கின்றது,,,,,
ஆலயங்கள் எல்லாம் அடைத்தே கிடக்கின்றன…
சாமிகளெல்லாம் நம்போல் ஓய்வே எடுக்கின்றன
வானத்தில் இருந்துதான் விசக்கிருமி வந்தாதா
,சீனத்து மண் தான் எமக்கும் தந்ததா
மாநகரின் மாநாட்டுக் காரனின்
மடச் செயல் என்பார் சிலர்,,,,
கதியற்று நிர்பதற்க்கு மதியிருந்தும்
விதி என்பார்  மற்றொரு பாலர்,,,,
பாவத்தின் சம்பளம் தான் மரண மென்போம்,
உண்மை,,,,உண்மை,,,,
தனித்தில்லாதது பாவம்,,,,
கைதீண்டுவதும்,   படி தாண்டுவதும் பாவம்,,,,
கூடாது என்ற போதும் கூடுவதும்,
கூட்டம் கூட்டுவதும்  பாவம்,,,
தேடாதே என்ற போது  தேடுவதும்,
வெளியில் ஓடாதே என்ற போது ஓடுவதும் பாவம் ,,,,
முகம் மூடாமல் ,இப்படியே தொட்டுத் தொடர்ந்தால்,,,,,
 பட்டுப் படர்ந்தால் …..
தொற்றி விடுவதோடு கொரானா நமமை
தொடர்ந்து வரும்  கதையாகும்,,,
 நாடே ஓர் நாள் சிதையாகும்,.
கொரானா ஒன்றே விதை யாகும்,,,,
இதுவரை மருந்தில்லை இதற்க்கு
 சொந்த பந்தங்களை மறப்பது ஒன்றே மருந்தாகும்
அண்டை வீட்டாரோடு அந்நியமாய்
இருப்போம் கொஞ்சநாள் அனைவரையும்,
பிரிந்தே கிடப்போம், கொஞ்சும் நாட்களை
விலக்கியே வைப்போம்,,,
தடைகளை தாண்டினால் இனி வரும்
நாட்களெல்லாம் தடைகளே தாண்டவம் ஆடும்,,,,
படி தாண்டா பத்தினிபோல் பத்திரம் மாய்
பத்தியம் காத்து, பக்தியோடு
 தனிமை ஒன்றே வைத்தியம் என்போம்
தனித்திருப்போம் என சத்தியம் செய்வோம்
கொரானா வைக் கொல்வோம் உயிரை வெல்வோம்,,,,..

Thursday, February 27, 2020

கவியரசன்


”கவியரசன் கண்ணதாசன்”

நற்குடியில் பிறந்த கவி மகன்
பொற் குவியில் புலர்ந்த குலமகன்
இப்புவியே புகழ்ந்த கலைமகன்
கம்பனை கற்றகவி யவன்
கற்பனை வளம் நிறைந்த தமிழ் அவன்
விற்பனை நோக்கமில்லா வாணிபன்
வான்புகழ் கொண்டவந்தான் வள்ளுவன்
அவன் குறள் படித்து தடம் பதித்த இளமகன்
இளமை துள்ளும் கவிபடைத்த காவியன்
இனிமை பொங்கும் கவி படைக்கும் வாலிபன்
பட்டினத்தார் பாடம் கூட உன் பாட்டிலுண்டு
பட்டி தொட்டி பாடல்களும் உன் ஏட்டிலுண்டு
மாட்டுவண்டி புகாசாலையிலும் உன்
பாட்டு வண்டியை பரபரப்பாய்  ஓட்டிச் சென்றாய் !
பாரதியின்பாட்டுக்களையும் படித்த.......நீ.....
அவன் பாட்டுத் தேரை சாரதியாய் ஓட்டிவந்தாய்
புத்தி கெட்ட மனிதன் கூட உன் பாட்டுக் கேட்டால்
புது சக்தி பெற்று வாழ்ந்திடுவான் பாட்டின் சங்கதி கேட்டு
பொருள் தந்தபாட்டுக்களை நீ படைத்ததாலே
பொருள் பல பெற்று வாழ தமிழ் அன்னை அருள் தந்தாளே!
வாயிற் படி நிறைந்தது தான் மனித வாழ்க்கைப்படி
அதைப் படிக்க வா இப்படி என வாஞ்ஜையோடு அழைத்தாய்
வாழ்கையின் அர்தம் சொன்ன அர்தமுள்ள கவியும்
பண் பாட்டு பண்ணும் பல ஆயிரம் படைத்துத் தந்தாய்
பற்றற்றவாழ்க்கையினை பற்றோடு பாடினாய்
முற்றும் துரந்த முனிவன்போல் முடிவையும் பாடினாய்
வலிமையான கருத்தினை எழிமையாகச் சொன்னாய்
எழிமையான கருத்தினை வலிமையாகச் சொன்னாய்
வலிகொண்டவாழ்வுதனை வெல்லவழி பல சொன்னாய்
அழகானக்கருத்தினை ஆழமாக்கிச் சென்றாய்
படித்துபட்டமோ பதவியோ பெற்றதில்லை,…..நீ
வடித்தகவியால்”கவியரசு”எனும்பட்டம்பெற்றாய்
ஐம்பதிலும்ஆசைகொண்டாய்ஆசையுடன்பாசம்கொண்டாய்
பதினாலும்பெற்றுபெருவாழ்வுவழ்திட்டாய்.

வாழ்க்கையைஅனுபவித்துவாழ்ந்தாய்அந்த
அனுபவத்தைகவிதைகளாய்படிக்கத்தந்தாய்
எட்டாவதாய்பிறந்தாய்நீ….முத்தையாவாக
எட்டுக்குமேல்நீபடித்ததில்லையாயினும் ,நீ
எட்டியஉயரம்இதுவரைஎவரும்எட்டியதில்லை
அர்த்தமுள்ளமதத்திற்குமேலும்அர்த்தம்சொன்னாய்
வருத்தமுள்ளமனங்களுக்குபாடல்மருந்தேதந்தாய்
இன்பவாழ்விற்குஇயன்றவரைபாடல்விருந்தேதந்தாய்
மதம்பிடித்தமனிதனிடம்தாமதமேபிடிக்கும்என்றநீ
தாமதமாய்செல்லாமல்அவசரமாய்சென்றாயோ!
உன்பாட்டில்மயங்காதோர்இப்பாரில்இல்லை…நீயோ
பாட்டிலில்மயங்கியதால்பட்டென்றுசென்றாயோ!
வந்தவரெல்லாம்தங்கிவிட்டால்,வருவோர்க்குஇடமேதுஎன்று
வானோரைவாழ்த்தவழிவிட்டுச்சென்றாயோ!
யவன்அழைத்தாலும்குழந்தைபோல்செல்வாயாம்!
எமன்அழைத்ததுதெரியாமல்ஏமாந்துசென்றாயோ!
நீ.... நின்ற இட மின்னும் காலியாக நிற்கின்றது
நீ.....தந்த கவி எல்லாம் ஆல் போல் தழைத் தேநிற்கின்றது
நீ......நிரந்தரம் ஆனவநன் தான் என்நிலையுலும்
நீ.......சொன்னது போல் உனக்கு மரணமே  இல்லை ,ஆனாலும்
மீண்டும் ஒரு முறை கவி மகனாய் பிறக்க வேண்டும்
தமிழன்னைக்கு தலைமகனாய் காலமெல்லாம் சிறக்க வேண்டும்
கவியரசனாய் மீண்டும் இந்த மண்ணை ஆழவேண்டும்.........


----- சுந்தரக்கண்ணன் -----