<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Sunday, June 18, 2017

அன்புள்ள அப்பாவுக்கு











தான் பார்க்காத உலகத்தை தன் மகனாவது பார்க்கட்டும் என தன் தோழ்மீது சுமந்த……… தகப்பனை ,,,,,,
இழந்த தணையன் மார்களுக்கு தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் …
(எதுவுமே இருக்கும் போது பெரிதாக தெரியாது அதை இழந்த பின் தான் அதன் வேதனையும் வலியும் புரியும்)
அன்புள்ள அப்பாவுக்கு
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங்கெட்டும் போனதில்லை,
தந்தை வழி நடந்தோன் என்றும்
மனங்கெட்டு போ வதில்லை
எழுபதாண்டுகள் அன்போடு வாழ்தாலும்
எங்கள் வாழ்வில் ஐயமில்லை யய்யா
உம் பாசம் பெரியதையா
எங்களைஎல்லாம்
கண்போல வளர்த்த நீங்கள் எங்களை
கண்,கலங்க விட்டு கடும் துயரத்தை தந்து
போன வழி திரும்பா பொது வழி சென்றீரோ
என் தாயின்கண்ணீரை கண்டும்,
 காணாது சென்றீரோ?
கரைதிரும்பா பெருவழி தான் போனீரோ!
அந்த நாள் நினைவுகளும் எங்களோடு
வாழ்ந்த அந்தநாள் ஞாபகங்கங்களும் !
நிழலாடு கின்றதையா !நெஞ்சம் மறவாமல்
இன்றும் வாடுதையா,ு
 நாங்கள் உங்கள் அன்பை சுமந்து ,சுமந்து
அல்லல் படும்படியாய்,ஆக்கிட்டுச்சென்றீரோ!!
அவசரமாய் சென்றீரோ!ஐந்தாறு மாதங்களில்
அவிந்து விடும் அவர் நினவு என பதினாறுக்கு
வந்தாரும் சொன்னார்கள்வாயார அழுதார்கள் !
ஆண்டுகள் பல ஆயினும்
உம் நினைவுகள் அழியவில்லை
எம் நெஞ்சமும் மறக்கவில்லை!
தகப்பன் ஸ்தானத்தில் சரியாக இருந்தீர்கள்
தன் மானத்தோடு வாழவும்
தங்கமான இவ் வாழ்வில்
பொய்யும் திருட்டும் பொறாமையும்
ஆகதென பொறுமையாக சொல்லிச் சொல்லி
வளர்த்தீர்கள் , யாருடைய பணத்தையும்
ஏமாற்றாமல் வாழ்ந்தால்
ஏற்றம் பெற்றுவாழலாம் என்ற
கொள்கைமட்டும் கொண்டவராய்
கொறையில்லாது வாழ்ந்தீர்கள்
 உங்கள் பணம் லட்சக்கணக்கில்
வரவேண்டியதிருந்தாலும் ...
நாம் கொடுக்கவேண்டிய கடனுக்க்காக
சாமிபோல வைத்திருந்த நாலு வயலும்
வித்திங்க ளே நாணயத்த
 காப்பா த்தினிங்களே!
உம் பெருமை மொத்ததையும்
சொல்ல இப்பக்கங்களும் ,
பத்தாது ,என் அறிவும் போதாது
என்வாழ்வில் நான் கற்றதும் பெற்றதும்
ஏராளம் இருப்பின் எனை்பெற்ற
தந்தையை இழந்தது உண்மையில்
ஈடுசெய்ய முடியா இழப்பே!
”நீர்” இல்லா இவ் வாழ்க்கை
நீரில்லா மீன் போலானது!
நீரில்லா நீறோடையில்
நீந்துதற்கு "நீர்" இல்லையே!

No comments: