<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Monday, July 3, 2017

முதலில் இந்தித் திணிப்பு; அடுத்து சமஸ்கிருதம்!

தீக்கதிர் கட்டுரை



இந்தித் திணிப்பு என்பது தற்காலிகமானது. சமஸ்கிருதத்தை தேசிய மொழியாகவும், நாட்டின் அலுவல்மொழியாகவும் ஆக்கி சட்டமியற்றுவதன் மூலம் இந்தி உட்பட இதர மொழிகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுவதே சங்பரிவாரின் உண்மையான நோக்கமாகும்.

இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரைமத்திய அரசின் அனைத்து அலுவல்களுக்கும் நாடாளுமன்ற அலுவலுக்கும்ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை கட்டாயமாக்கும் வகையில் இந்தமசோதா திருத்தப்பட வேண்டும். மொழிக்கொள்கைகளை மாற்றுவதற்கு விதி உருவாக்கும் எந்த அதிகாரமும் (மத்திய) அரசாங்கத்திற்கு இருக்கக் கூடாது’ (சிபிஎம் அரசியல்தலைமைக்குழு தீர்மானம் 1968)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சுமார் அரை நூற்றாண்டிற்கு முன்னர் நிறைவேற்றிய தீர்மானம் இது. ‘மொழிக்கொள்கையில் மாற்றம் செய்யும் எந்த அதிகாரமும் (மத்திய) அரசிற்கு இருக்கக்கூடாது’ என்ற வாசகத்தை புரிந்து கொள்ளும்எவருக்கும் இது மிகக் கடுமையானதாக தோன்றக் கூடும். ஆனால் அரைநூற்றாண்டு கழிந்த பிறகு இந்த தீர்மானத்தின் வாசகம்இன்று, இன்னும் கூடுதல் பொருத்தப்பாட்டுடன் விளங்குவது மகிழ்ச்சிக்கு உரியது அல்ல.இப்பிரச்சனை வெறும் மொழிப்பிரச்சனை மட்டுமல்ல. ‘மொழிப் பிரச்சனைக்குப் பின்னே ஆழமாகப் புதைந்து கிடப்பது இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் பிரச்சனை.
இந்தியா ஒரே ஒரு தேசிய இன அரசு அல்ல;மாறாக பல தேசிய இனங்களைக் கொண்டுள்ளஅரசு அமைப்பிது. இந்த உண்மையை மறுத்துமொழிப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. (தோழர் பி.ஆர்.ராமமூர்த்தி 1968 - மொழிப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலை)எனவே தான், தேசிய இனப்பிரச்சனையாக இருப்பதால் தான் விடுதலைப் போராட்டக் காலத்தில் - அப்போது இந்தியாவின் எந்தவொரு தேசிய இனமும் இன்னொரு தேசியஇனத்தை அடக்கியாளும் நிலை இல்லை என்ற போதும் - அனைத்து தேசிய இனங்களும் ஆங்கில காலனி ஆதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட போதும் - மொழி பிரச்சனையில் இந்திய விடுதலை இயக்கம் குறிப்பாக காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது.விடுதலைக்கு முன்னர் அது மொழிவாரி மாநிலக் கோரிக்கை, நீதி, நிர்வாகம், மாநில மொழிகளில் நடப்பது, உயர் கல்வி வரை மாநில மொழி அல்லது ஆங்கில மொழி, பிரிட்டிஷ் நிர்வாக ஏற்பாட்டின்படி அல்லாமல் மொழிவாரி மாநில அமைப்புகள் என்பதையெல்லாம் முன்வைத்தது. ஆனால் விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலக் கோரிக்கையைக் கூட அது ஏற்க மறுத்தது. போராட்டங்கள், இயக்கங்கள், துப்பாக்கிச் சூடுகள், மரணங்கள் இனியும் தாமதிக்க முடியாது என்கிறநிலையில் தான் விடுதலைக்குப் பின் 20 ஆண்டுகள் கழித்துத்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. எனவே தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை மொழிப்பிரச்சனை என்று மட்டும் கருதாமல் இதுதேசிய இனப் பிரச்சனையின் ஒரு பகுதியெனப் பார்த்தது; பார்க்கிறது.அரசியல் நிர்ணய சபையில் 1946ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று பேசிய ஆர்.வி. துலேக்கர் என்ற உறுப்பினர் ‘இந்துஸ்தானி தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கஉரிமை கிடையாது. இந்திய அரசியலமைப்பை உருவாக்க இந்த அவையில் இருப்பவர்கள் இந்துஸ்தானி தெரியாதவர்கள் என்றால் அவையில் உறுப்பினராக இருக்கத்தகுதியற்றவர்கள். அவர்கள் வெளியேறிவிடுவது நல்லது’ என்று பேசினார்.
இதேபோன்ற தொனியில் தான் பி.டி. தாண்டன், சேத்கோவிந்த் தாஸ், சம்பூர்ணானந்த, ரவிசங்கர் சுக்லா, கே.எம். முன்சி போன்றோரும் பேசினார்.இந்தி மொழியின் மீதான அவர்களின் கரிசனம் தவறல்ல; ஆனால் பிறமொழிகள் மீதான விஷம் தோய்ந்த வெறுப்புக்கள் நியாயமற்றவை. சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய்மொழி என்று பேசியவர்களும் அப்போதிருந்தனர். இதன் தொடர்ச்சியும் பகுதியுமே தேசியமொழி மற்றும் அலுவல் மொழி குறித்த விவாதங்களும் பிரச்சனைகளும். இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள மக்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதால் இந்தி இந்தியாவின் தேசியமொழியாகவும் அலுவல் மொழியாகவும் இருக்க வேண்டும் என அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தப்பட்டது. மிக நீண்ட விவாதங்கள் மற்றும் இழுபறிக்குப் பின்னர் அரசியல் சட்டத்தின் 17ஆவது பகுதியில் அலுவல் மொழி குறித்த பிரிவுகள் 343 முதல் 349 வரை சேர்க்கப்பட்டன. இவற்றின்படி:ட தேவநாகரி வரிவடிவ இந்தி அலுவல்மொழியாக இருக்கும்.ட 15 ஆண்டுகளுக்கு அதாவது 1965 ஜனவரி25 வரை ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும் (சுருக்கமாக இந்தியும், ஆங்கிலமும் தவிர இதர இந்திய மொழிகள் மத்திய அரசின் அலுவல் மொழியாக இருக்க முடியாது.)ட 15 ஆண்டுகளுக்குப் பிறகும் தேவைப்பட்டால் சில துறைகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம். அதற்கு நாடாளுமன்றம் சட்டமியற்றலாம்.
1955 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் இந்திமொழி பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவற்றினை கமிஷன் அமைத்து அந்த பரிந்துரைகளை நிறைவேற்றலாம்.ட மாநில அரசின் அலுவல் மொழிகளாக அந்த மாநிலத்தில் வழக்கிலிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளையோ இந்தியையோ பயன்படுத்தலாம். அதற்கு மாநிலங்கள் சட்டமியற்றிக் கொள்ளலாம்.ட மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் கடிதப்போக்குவரத்துக்கள் மத்தியஅரசின் அலுவல் மொழியிலேயே இருக்கும். (அதாவது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே கூட இந்தி தான் அலுவல்மொழியென்றால் இந்தியில் தான் கடிதங்கள் எழுதிக் கொள்ள வேண்டும்.)ட உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் மொழியாக ஆங்கிலம் நீடிக்கும்.ட நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மசோதாக்கள், அரசாணைகள் ஆகியவையும் ஆங்கிலத்திலேயே இருக்கும்.இவைதான் மத்திய அரசின் அலுவல் மொழி குறித்த அரசியல் சட்டப்பிரிவுகள். இந்நிலையில் 1965ஆம் ஆண்டு நெருங்கும்வேளையில் இப்பிரச்சனை பூதாகாரமாக வெடித்தது. இதையொட்டிதான் ஜவஹர்லால் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியை அளித்தார். அதேபோன்று இந்திய அலுவல்மொழிச் சட்டம் 1963இல் இயற்றப்பட்டது. 1965க்குப் பிறகும் ஆங்கிலம் அலுவல்மொழியாக பயன்படுத்தப்படலாம் என்று அந்தச்சட்டம் கூறியது. இருப்பினும் 1965 ஜனவரியில் இப்பிரச்சனை குறித்து மக்களின் மனநிலை கொதிநிலைக்குப் போனது. முன்னர் நேருகொடுத்த வாக்குறுதியை இப்போது லால்பகதூர் சாஸ்திரி கொடுத்தார்.
1938இல் இந்தியைகட்டாயமாக்கிய ராஜாஜி கூட பின்னர் சட்டம்போதாது அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டுமென்று கோரினார். அந்த அளவிற்கு பிரச்சனையின் தீவிரம் இருந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக மத்திய அரசாங்கம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறது. இப்போதுபாரதிய ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு அவர்களின் மொழிக்கொள்கையின் அடிப்படையில் இந்தியை தீவிரமாகதிணிப்பதற்கு அனைத்து வகையிலும் முயற்சித்து வருகிறார்கள். முன்பெல்லாம் மத்திய அரசின் ஆவணங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தனித்தனியாக இருப்பது வழக்கம். பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு மத்திய நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடுவது வழக்கமாக்கப்பட்டுள்ளது. இதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தை பாஜக கல்வித்துறை மூலமாகவும் தனது ஒவ்வொரு துறையின் மூலமாகவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.பாஜக என்கிற கட்சிக்கு தனி மொழிக் கொள்கை கிடையாது. ஆர்.எஸ்.எஸ்.சின் இரண்டாவது தலைவராக இருந்த மாதவ சதாசிவ கோல்வால்கரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே அவர்கள் ஒவ்வொரு கொள்கையையும் அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். மொழிக் கொள்கையை பொறுத்தமட்டில் கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.‘அனைத்து மொழிகளும் அதன் உட்கூறுகளும் பல்வேறு மலர்களிலிருந்து வெளிப்படும் நறுமணம் போன்று தேசத்தின் செழுமையான கலாச்சாரத்தை பிரதிபலிப்பவையே. இந்த மொழிகள் அனைத்திற்கும் உத்வேகம் அளிப்பது மொழிகளின் ராணியான, மொழிகளின் கடவுளான சமஸ்கிருதமே.
அதன் செழுமை மற்றும் புனிதத்துடன் அதன் தொடர்பு ஆகியவற்றின் காரணமாக நமது தேசியவாழ்க்கையின் பொதுமொழியாக சமஸ்கிருதமே இருக்க முடியும். சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வது கடினமானதல்ல. சமஸ்கிருதம் தான் இன்றைய நமது தேசிய வாழ்க்கையை இணைக்கும் முக்கியமான கூறுகளில் ஒன்று. துரதிர்ஷ்டவசமாக தற்போது அதுபொதுவாகப் பயன்படுத்துவதில்லை. அதோடுநமது ஆட்சியாளர்களுக்கு அதை வழக்கத்தில்கொண்டு வருவதற்கான தார்மீகப் பெருமையோ தைரியமோ கிடையாது. ........எனவே தேசிய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இணைக்கும் மொழியாக சமஸ்கிருதம் இடம்பெறுகிற வரை நாம் நடைமுறை சாத்தியம் கருதி இந்திக்கு ஒருவாய்ப்பளிக்கலாம்.
இயற்கையாகவே அனைத்து இந்திய மொழிகளைப் போலவேசமஸ்கிருதத்தில் இருந்து தான் இந்தி பிறந்திருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம்போன்ற நவீன அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் இந்தி மொழி சமஸ்கிருதத்தையே சார்ந்திருக்கிறது.’எனவே இந்தித் திணிப்பு என்பது தற்காலிகமானது. சமஸ்கிருதத்தை தேசிய மொழியாகவும், நாட்டின் அலுவல்மொழியாகவும் ஆக்கி சட்டமியற்றுவதன் மூலம் இந்தி உட்பட இதர மொழிகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுவதே சங்பரிவாரின் உண்மையான நோக்கமாகும். எனவே தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கட்டுரையின் துவக்கத்தில்சொன்ன தீர்மானத்தை 1968ஆம் ஆண்டு நிறைவேற்றியது. மத்திய அரசை பொறுத்தவரையில் மொழி குறித்து எந்தவிதமான விதிகளும் இயற்றுவதற்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும்.

No comments: