<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Wednesday, May 31, 2017

பெருமாநல்லூர், அவிநாசியில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்

நன்றி தீக்கதிர்

பெருமாநல்லூர்,அவிநாசி
அவிநாசி, மே 31-
பெருமாநல்லூர், அவிநாசி பகுதிகளில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருமாநல்லூரில் இரண்டு இடங்களில் மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பையும் மீறி சில தினங்களுக்கு முன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் அய்யம்பாளையம், பாரதியார் காலனி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த இரு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பெருமாநல்லூர் பகுதியில் எந்த இடத்திலும் மதுபானக் கடை அமைக்கக் கூடாது எனக்கோரி அனைத்துக் கட்சி, பொது நல அமைப்பு, பொதுமக்கள் சார்பில் பெருமாநல்லூர் நான்கு வழிசாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் குப்பை கிடங்கு மற்றும் அவிநாசி - மங்கலம் சாலை இணைக்கும் சாலையில் அருகருகே அண்மையில் இரு மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஆகவே, இந்த இரு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments: