<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Wednesday, May 31, 2017

பினராயி விஜயன் அதிரடி

மாட்டிறைச்சி விவகாரத்தை விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்


சென்னை, மே 31 -
மாட்டிறைச்சி தொடர்பான விவகாரத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மோடி அரசுக்கு ஆரம்பம் முதற்கொண்டே மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.அசைவம் உண்ணும் பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் பாஜக அரசின் இந்துத்துவா நடவடிக்கை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ள அவர், இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக மாநில முதல்வர்களின் கருத்தையும் திரட்டி வருகிறார்.
இந்நிலையில், புதனன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், மாடு விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு உரிமையில்லை என்றும், இவ்விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை; அதே போன்று இறைச்சிக்காக மாடு வெட்டுவதை முறைப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு இல்லை; மத்திய அரசின் ஒழுங்குபடுத்தும் விதிகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்; உணவிற்காக கால்நடைகளை வெட்டுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது; ஆனால், மத்திய அரசின் உத்தரவு விலங்குகள் வதைத் தடை சட்டத்திற்கு எதிரானது; மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது; அதற்கு பாஜக-விற்கு உரிமை இல்லை.” என்று கூறியுள்ள பினராயி விஜயன், “இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

No comments: