<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Wednesday, May 31, 2017

கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

நன்றி தீக்கதிர்


கேள்வி: இந்தியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு முதல்வர்களில்நீங்கள் ஒருவர். திரிபுரா ஒரு மிகச் சிறிய மாநிலம். எனவே (ஆதரவாளர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் கூட) உங்களது அரசாங்கம் மீது வலுவான கூர்மையான கவனம் செலுத்துகின்றனர். இது உங்கள் மீது கூடுதல் சுமையை உருவாக்குகிறதா?
பதில்: அப்படி எந்த ஒரு சுமையையும் நான்உணரவில்லை. எங்களது மக்கள் சேவையின் ஒரு பகுதியாகவே இதனை நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் தெளிவான கொள்கைகள் எங்களிடம் உள்ளன. இந்த கொள்கைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகிறோம். எங்களை பொறுத்தவரை இது வழக்கமான செயல்பாடுதான்!
கேள்வி: கேரளாவின் இடதுசாரி அரசாங்கங்கள் முன்னோடி திட்டங்களுக்கு புகழ் பெற்றவை. நிலச்சீர்திருத்தங்கள், அனைவருக்கும் கல்வி, பொருளாதாரத் திட்டமிடலை மக்களிடம் இருந்து உருவாக்குதல், மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றை குறிப்பிடலாம். உங்கள் அரசாங்கத்தின் முன்னோடி திட்டம் என்ன?
பதில்: இந்த அரசாங்கத்தின் இலக்கு என்பது எந்த ஒரு குறிப்பிட்டத் திட்டத்தின் மீதும்கூடுதல் அழுத்தம் என்பது அல்ல; மாறாககேரளாவின் ஒட்டு மொத்த சிறப்பான வளர்ச்சி என்பது தான் இலக்கு ஆகும். இந்த ஒட்டு மொத்த வளர்ச்சியை பெற்றிட பல துறைகளில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் ஒட்டு மொத்தமாக கேரளாவின் முகத் தோற்றத்தை மாற்றும். முந்தைய இடதுசாரி அரசாங்கங்கள் அமலாக்கிய திட்டங்கள் வரலாற்றில் இடம் பெற்றன. அதே போல தற்போதைய திட்டங்களும் வரலாற்றில் இடம் பெறும் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
கேள்வி:: இன்னும் சிறிது குறிப்பாகச் சொல்ல முடியுமா?
பதில்: இந்த அரசாங்கம் முன்கையெடுக்கும் பல திட்டங்கள் பற்றிக் கூற முடியும். கேரளாசிறந்த கல்வி முறையை கொண்டுள்ளது. எனினும் மாநிலத்தின் பொதுக் கல்வி முறையில் சில பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான் எங்களது முன்னுரிமை. அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளையும் இணையதளம் மூலமும் கணினி மூலமும் இணைத்து சீர்மிகு வகுப்பறைகளை ‘SMART CLASSES’ உருவாக்குவது எங்களது திட்டம். இத்திட்டம் அமலான பிறகு உலகில் உள்ளதலை சிறந்த பள்ளியில் உள்ள அதே வசதிகளை பொது பள்ளியில் படிக்கும் கேரளா மாணவன் பெறுவார்.
மருத்துவத் துறையிலும் இத்தகைய மாற்றங்கள் உருவாகும் என நம்புகிறோம். முதலில் குடும்ப மருத்துவர்கள் கொண்ட ஒரு முறையை உருவாக்குவது என்பது திட்டம். நவீன உயர்தர சிறப்புச் சிகிச்சைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன. இத்தகைய சிறப்பான உயர் சிகிச்சைகள் மாவட்டஅளவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்களுக்கு தருவதற்கு திட்டம் இயற்றி அமலாக்க முனைந்து வருகிறோம். மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை தரும் வகையில்அடிப்படையில் பல மாற்றங்களை உருவாக்கும் பொருட்டு ‘ஆர்த்ரம்’ (Aardhram) சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதே போல(Life) லைஃப் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இது Livlihood(வாழ்வாதாரம்), Inclusion(சமூக வளர்ச்சியில் இணைத்தல்),Financial Empowerment (நிதி ஆதாரம்) திட்டம் ஆகும். இதன் மூலம் கேரளாவில் வீடு இல்லாதவர்கள் எவருமே இல்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு ஆகும்.
கேள்வி: கேரளா கல்வியிலும் உடல் ஆரோக்கியப் பிரிவிலும் ஏற்கெனவே சிறப்பாக உள்ளது. ஆனால் விவசாயத்தை பற்றி நிலைமை என்ன? உணவு பொருட்களுக்கும் காய்கறிகளுக்கும் கேரளா ஏனைய மாநிலங்களையே மிகவும் சார்ந்திருக்கும் நிலை உள்ளதே?
பதில்: இப்பிரச்சனை குறித்து நாங்கள் உணர்ந்துள்ளோம். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது குடிமக்களின் உரிமை. எனவேதான் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். கேரளாவின் விவசாயத் துறையை இயற்கை விவசாயம் மூலம் அடிப்படையிலேயே மாற்றுவதுதான் எங்களது நோக்கம் ஆகும். காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். விவசாயத்திற்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் தற்பொழுது தரிசாக உள்ள நிலங்களையும் விளை நிலங்களாக மாற்ற நாங்கள் முனைகிறோம்.
கேள்வி: கேரளாவின் பொருளாதாரம் குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. வேலையின்மை அதிக அளவில் உள்ளது. கேரளாவில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. பிரச்சாரத்தின் பொழுது இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போவதாக நீங்கள் கூறினீர்கள். பொருளாதரத்தை சீர்செய்ய உங்களது திட்டம் என்ன?
பதில்: வளங்கள் மிகுதியாக உள்ள மாநிலம் அல்ல கேரளா. இது ஒரு மிகப்பெரிய சவால்ஆகும். வலுவான வளங்கள் இருந்தால்தான் தொழில்கள் வளரும். இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க ‘கேரளா உள்கட்டமைப்பு முதலீடு நிதியகம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பின் மூலம் ரூ. 50,000 கோடி திரட்டி உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
கேள்வி: ஆனால் தொழில்கள் கேரளாவிற்கு வருமா? தொழில் நடத்த உகந்த மாநிலமாக கேரளா இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர். தீவிர தொழிற்சங்க சூழல் முதலீட்டாளர்களை அண்டவிடுவது இல்லை.....
பதில்: இந்தக் கூற்று உண்மை அல்ல. இத்தகைய தொழிற்சங்க செயல்பாடுகள் காரணமாக எந்த ஒரு தொழிலாவது கேரளாவில் மூடப்பட்டு உள்ளதா? இங்கு செயல்படும் எந்த ஒரு தொழில் குழுமமாவது தொழிற்சங்கங்கள் காரணமாக நாங்கள் தொழிலை நடத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்களா? கேரளா குறித்து பல அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. கேரளாவில்தொழில் வளத்தைப் பெருக்கிட நாங்கள் புதிய தொழில் கொள்கையை அறிவிக்க உள்ளோம். தொழிலை உகந்தமுறையில் செய்வதற்கான சூழலை உருவாக்குவதே எங்களது அணுகுமுறை. தொழில்கள் தொடங்கிட கேரளா ஒரு சிறந்த மாநிலமாக உருவாகும்.
கேள்வி:: உங்கள் கட்சி பாஜக குறித்தும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்தும்கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. நடுவண் அரசுடன் உங்களது உறவு எப்படி உள்ளது?
பதில்:இது இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. மோடியின் தலைமையில் செயல்படும் நடுவண் அரசாங்கத்தின் கொள்கைகளில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே சமயத்தில் மாநிலத்திற்கு நடுவண் அரசுடன் சிலபிரச்சனைகளும் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு (பணமதிப்பு நீக்கம் காரணமாக) கேரளா சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்க கேரளாவின் அனைத்து கட்சிகளும் எனது தலைமையில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு நேரம்ஒதுக்கப்படவில்லை. பொதுவாக பிரதமர்கள் ஒரு மாநில முதல்வரின் தலைமையில் வரும் குழுவை சந்திப்பதில் இப்படி தவறான நிலைபாடுகள் எடுப்பதில்லை. இத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும் கேரள மாநில அரசாங்கத்திற்கும் நடுவண்அரசாங்கத்திற்கும் இரண்டு அரசாங்க அமைப்புகள் என்ற முறையில் உறவு சீராகவே உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் பதவி ஏற்றவுடன் 2016இல் தில்லிக்குச் சென்றோம். பல தலைவர்களை சந்தித்தோம். பிரதமரையும் சந்தித்தோம். அப்பொழுது பிரதமர் கேரளாவில் ஆயுர்வேதத்திற்காக ஒரு நிறுவனத்தை தொடங்க முடியுமா என்று கேட்டார். அதற்காக நடுவண் அரசு உதவ முடியும் எனவும் சொன்னார். இப்பொழுது உலக தரம் வாய்ந்த ஆயுர்வேத நிறுவனத்தை தொடங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். நாங்கள் வேறு சில ஆலோசனைகளையும் முன்வைத்தோம். அவற்றை நடுவண் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. எனவே மத்திய, மாநில உறவுகள் சீராகவே உள்ளனஎன கூறலாம்.
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் என்ற முறையில் பாஜகவின் வளர்ச்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் உள்ளது. மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது...
பதில்: இப்பொழுதுள்ள அரசியல் சூழலை நீங்கள் நோக்கினால் நாம் ஒரு ஆபத்தான கட்டத்தில் இருந்து வருகிறோம் என்பதை உணர்வீர்கள். மற்ற கட்சிகளிடமிருந்து பாஜக எப்படி வேறுபடுகிறது எனில் பாஜகஆர்.எஸ்.எஸ் எனும் அமைப்பின் பிடிக்குள் உள்ளது. அதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்தான் முக்கிய முடிவுகளை நேரடியாக தீர்மானிக்கிறது என்பது தெளிவு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல. ஆர்.எஸ்.எஸ் மதச்சார்பின்மையை ஏற்றுகொள்வது இல்லை. ஒரு பன்முகத்தன்மை உள்ள நமது தேசத்திற்கு இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பு இயக்கம் உருவாக்குவது அவசியம் ஆகும். ஆனால் அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி தேசம் முழுவதும் செயல்படுகிறது என்றாலும் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பை உருவாக்கும் வலுவை இழந்துள்ளது. பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைவதை நாம் பார்க்கிறோம். தேசியத் தலைவர்களும் மாநிலத் தலைவர்களும் ஏன் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்களும் கூட பாஜகவில் இணைகின்றனர். எனவேபாஜகவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் காங்கிரசை முழுமையாக நம்புவது பொருத்தமானது அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமேவலதுசாரி (பொருளாதாரக்) கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் கொள்கைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது. பாஜக அதே பொருளாதாரக் கொள்கைகளைதான் பின்பற்றுகிறது. பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்த வரை காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. எனவேதான் காங்கிரசை ஒரு பெரிய எதிரியாக பாஜக பார்ப்பது இல்லை. பாஜகவிற்கு பெரிய எதிரி இடதுசாரிகள்தான்! இன்றையை சூழலில் இடதுசாரிகள் இந்திய அளவில் வலுவாக இல்லை. இருப்பினும் பா.ஜ.க.விற்கு இடதுசாரிகளை பார்த்து தான் பயம் உருவாகிறது. இதனை இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள கேரளாவிலும் திரிபுராவிலும் நீங்கள் பார்க்க முடியும்.
கேள்வி: கேரளாவிலும் பா.ஜ.க. வளர்கிறது.அரசியல் ரீதியாக அது தீண்டப்படாத கட்சியாக இல்லை. கேரளாவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாஜகவிற்கு உள்ளார்.அதன் வாக்கு விகிதமும் அதிகரித்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு இணையாக ஊடகங்களும் பாஜகவிற்கு முக்கியத்துவம் தருகின்றன.
பதில்: கேரளாவில் அனைத்துவிதமான அரசியல் நாடகங்களையும் பாஜக அரங்கேற்றி வருகிறது. எனினும் பொது ஆதரவு பெற இயலவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் (நேமம்/திருவனந்தபுரம்) காங்கிரசின் உதவியுடன் வென்றது. காங்கிரஸ் தனதுவாக்குகளை பாஜகவிற்கு தந்து அதற்கு பிரதிபலனாக வேறு இடங்களில் பாஜகவின் வாக்குகளைப் பெற்றது. ஆனால் பாஜக தனது வலுவைவிட அதிகமாக ஊடகங்களின் ஆதரவை பெறுகிறது என்பது உண்மைதான்! மத்தியில் அது ஆட்சியில் உள்ளது என்பது காரணமாக இருக்கலாம். அதனாலேயே இங்கு பாஜக வளர்கிறது என்று கூற முடியாது.
கேள்வி: மாநில மற்றும் மத்திய பாஜக தலைமை இரண்டுமே கேரளாவில் அதன்ஊழியர்களை உங்களது கட்சி தாக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறது. உங்கள்அரசாங்கம் பதவியில் அமர்ந்த பிறகுஆர்.எஸ்.எஸ். மற்றும் உங்கள் கட்சியைசார்ந்த பல ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சுழற்சியை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?
பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்திட பல வழிகளில் ஆர்.எஸ்.எஸ். முயன்றுள்ளது. அதில் ஒன்று நேரடிகொலை வெறித் தாக்குதல் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பே இத்தகையதாக்குதல்கள் கட்சி மீது ஆரம்பித்துவிட்டன. சம்பந்தப்பட்ட அமைப்புகளை பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை நாம் உத்தரவாதம் செய்தோம். அதன் பின்னர் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதற்கு பின்னரும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும் பேச்சுவார்த்தைகள் மூலம் இதற்கு தீர்வு காண்பதை தொடர்வது என திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி: தேசிய அளவில் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் உங்களது பலம்சுருங்கி வருவது உங்களுக்கு வேதனையை தருகிறதா?
பதில்: கட்சியின் தளத்தை சீரமைத்திட ஒவ்வொரு மாநிலக் கிளையும் முயன்று வருகின்றன. எங்களுக்கு பெரிய பின்னடைவு என்பது மேற்கு வங்கத்தில் ஏற்பட்டது. ஆனால் மேற்குவங்கக் கிளைஇந்த சவாலை எதிர்கொள்ள தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அது நல்ல தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் எங்களது கட்சி சிறிய அமைப்பாகவே உள்ளது. ஆனால் சில இடங்களில் கட்சி அமைத்தகூட்டணிகள் எங்களை பலவீனப்படுத்தியுள்ளது. எங்களது தவறை உணந்துள்ளோம். எங்களது சுயேச்சையான வலுவை அதிகரித்திட முயன்று வருகிறோம். எனினும் தேசிய அளவில் எங்களது வலு எப்படி இருந்தாலும் இடதுசாரிகள் மட்டும்தான் மதவெறி சக்திகளுக்கு எதிராக வலுவாக (அரசியல்,தத்துவார்த்த மற்றும் கலாச்சார) களத்தில் போரிட இயலும். எனவேதான் பாஜக மற்றும் ஏனைய வலதுசாரிக் கட்சிகள் இடதுசாரிகளை தாக்குவது என்பது தொடர்கிறது.
நன்றி : இந்து 31.05.2017 (இந்து நிருபர்ஸ்டான்லி ஜானி அவர்களுக்கு அளித்த பேட்டி)
தமிழில்: அ.அன்வர் உசேன்

No comments: